வியாழன், 10 நவம்பர், 2011

கல்வி உரிமை நாள்


bk£çFnyõ‹ gŸëfŸ Ïa¡Feç‹ brašKiwfŸ, br‹id - 6
                                             e.f.v©. 5962 /m1/2011      ehŸ. 10.11.2011
                                                                          ----
                                   
       bghUŸ:

njÁa fšé ehŸ 11.11.2011 m‹W mDrç¤jš bksyhdh mòšfyh« Mrh¤ Ãwªj ehŸ cWÂbkhê  thÁ¤jš m¿ÎiufŸ    rh®ghf.
-----

            ϪÂa muÁ‹ kåj ts nk«gh£L¤Jiw ϪÂa ÂUeh£oš Kjš fšé mik¢ruhf ÏUªJ kiwªj bksyhdh mòšfyh« Mrh¤ mt®fë‹ Ãwªj ehëid fšé cçik ehshf bfh©lhLkhW bjçé¤JŸs ãiyæš kh©òäF ghuj Ãujk® mt®fë‹ brŒÂklš k‰W« kh©òäF jäHf Kjyik¢r® mt®fë‹ brŒÂklš M»ad ϤJl‹ Ïiz¤J  ϤJl‹ mD¥Ã it¡f¥gL»wJ.   11.11.2011 m‹W j§fŸ MSif¡F£g£l   mid¤J gŸëfëY« fhiy eilbgW« Ïiwtz¡f¤Â‹nghJ nk‰fh© brŒÂklšfis thÁ¥gj‰F j¡f elto¡if nk‰bfhŸSkhW bk£çFnyõ‹ gŸëfŸ MŒths®fŸ  nf£L¡bfhŸs¥gL»wh®fŸ.   ÏJ bjhl®ghf vL¡f¥g£l  elto¡ifæ‹ étu¤Âid bjçé¡FkhW  bk£çFnyõ‹ gŸëfŸ MŒths®fŸ  nf£L¡bfhŸs¥gL»wh®fŸ.
                                                                                               
            ÏJ F¿¤j bjhF¥g¿¡ifæid cl‹ mD¥Ã it¡FkhW bk£çFnyõ‹ gŸëfŸ MŒths®fŸ nf£L¡bfhŸs¥gL»wh®fŸ.


bk£çFnyõ‹ gŸëfŸ Ïa¡FeU¡fhf.
                                   
bgWe®
mid¤J bk£çFnyõ‹ gŸëfŸ MŒths®fŸ.

Õ.bu.10/11.





// c©ik efš //

b#.b#ayèjh
Kjyik¢r®                                                                                         jiyik¢ brayf«,
                                                                                                                br‹id-600 009.
                                                                                                                 
njÂ.  09.11.2011

thœ¤J¢ brŒÂ

            m‹òŸs khzt kâfns / c§fŸ midtU¡F«  v‹ tz¡f«.

            ϪÂa¤ ÂUeh£o‹ Kjš fšé mik¢ruhf ÏUªJ kiwªj bksyhdh mòš fyh« Mrh¤ mt®fë‹ Ãwªj ehshd et«g® 11 M« ehŸ M©LnjhW« njÁa fšé ehŸ   vd bfh©lhl¥g£L tU»wJ.  Ï›th©L Kjš ϪehŸ, fšé cçik ehshf” bfh©lhl¥glΟsJ.
            ϪÂa¤ ÂUeh£o‹ tU§fhy¤ Jh©fsh»a Ú§fŸ c§fë‹ fšéa¿it bk‹nkY« ts®¤J¡bfhŸs nt©L«.  fšéia él äf ca®ªj bršt« cy»š ntW VJäšiy, jäHf muR, khzt, khzéaç‹ fšé ts®¢Á¡fhf r¤JzÎ, ÓUil, ghl¥ò¤jf« M»at‰iw tH§FtJl‹ f£lzä‹¿ ngUªÂš gaz« brŒaΫ têtif brŒJŸsJ.  nkY«, nkšãiy tF¥ò gæY« khzt, khzéaU¡F ä t©oiaÍ« tH§F»wJ.  mid¤J gŸë taJ FHªijfS« vëjhf gŸë¡F bršY« tifæš, mt®fsJ FoæU¥ò¡F mU»š gŸëfis V‰gL¤JtnjhL, njitahd MÁça® gâæl§fisÍ« Ϫj muR V‰gL¤ÂÍŸsJ.
            khzt, khzéa®fŸ j§fŸ FL«g Nœãiy fhuzkhf gŸë go¥Ãid Ïilæš ãW¤jhkš bjhl®ªJ fšé gæštij C¡Fé¡F« bghU£L, Ï›th©L Kjš 10 k‰W« 11 M« tF¥ò khzt, khzéa®fS¡F %.1500/-« 12« tF¥ò khzt, khzéa®fS¡F %.2000/-« Áw¥ò C¡f¤ bjhifahf tH§f Mizæl¥g£LŸsJ.  nkY«, mid¤J muR k‰W« muR cjébgW« gŸëfëš nkšãiy tF¥ò gæY« khzt, khzéa®fS¡F ko¡fâåiaÍ« Ï›tuR tH§F»wJ.
            khzt, khzéa® ey‹ fU ϛtuR brašgL¤Â tU« ey¤Â£l§fis khzt, khzéa®fŸ e‹F ga‹gL¤Â, j§fŸ thœéš bk‹nkY« cau Ϫj “ fšé cçik ehëš” eh‹ thœ¤J»nw‹.



                                                                                                        b#.b#ayèjh,
jäHf Kjyik¢r®.


ஞாயிறு, 16 அக்டோபர், 2011

வா.மணிகண்டனின் (புலி)கவிதைப் பால்!

பின்குறிப்பாய் அமைய வேண்டிய ஒரு முன்குறிப்பு.
ஓரிரு தகவல் பிழைகளைத் திருத்தி எழுதியிருக்கிறேன். 
அடுத்து ஒரு பதிவு எழுதக் கூடும்.


வழக்கம் போல் இம்முறையும் தாமதமாகவே சென்றேன். எனது கருத்துக்களை இங்கு முதலாவதாக வைக்கிறேன். மணிகண்டன் ஓரளவு வாசித்திருக்கிறார் என்பது அவரது பேச்சில் புலப்பட்டது. ஆனால் அனுபவத்திலும் வயதிலும் மூத்தவர்களிடையே பேசும்போது சிறிது தடுமாற்றம் தென்பட்டது. நான் சொல்ல வந்த தடுமாற்றம் மூத்தவர்களுக்கு ஏற்பட்டது. அவர் வைத்த சில கருத்துகளே காரணம்.

கருத்து ஒன்று.

திருவள்ளுவர்க்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகே பாரதியாரின் கவிதாளுமையை பார்த்ததாக கூறினார். இது ஓரளவுக்கு சரியாகவே எனக்கு படுகிறது. இதற்கு சற்று விரிவான விளக்கம் தர வேண்டும்.  

கருத்து இரண்டு

சில கவிஞர்களின் பெயர்களை குறிப்பிட்டார். சிலரது பெயர்களை தவிர்த்தாரென்று சுட்டி காட்டப் பட்டது. இது எனக்கு பெரிய குறையாக எனக்குப் படவில்லை. இன்குலாப் பெய்ரையும் மேத்தாவின் பெய்ரையும் அவர் ஒருங்கே குறிப்பிட்டது கூட சிலர் எதிர்த்தனர். இது சரியல்ல.

அவர்களுக்கு வைரமுத்துவும் மேத்தாவும் திரைப்படங்களில் எழுதியதாலேயே அவர்களை இன்குலாப்புடன் சேர்த்து கூறக் கூடாது என்பது என்ன நியாயம்?

கருத்து மூன்று
கவிஞர்கள் எதனையும் சாராது தனித்து இயங்கினால்தான் கவிதைகள் சிறப்புற படைக்க இயலும் என்றார்.
இதனை முழுமையாக நான் ஏற்கிறேன்.
ஆனால் இக்கருத்தை வன்மையாக சிலர் கண்டித்தனர்.  இதில் அரசியல் என்கிற தனது வாதத்தை பொதியவெற்பன் வைத்தார். தான் கம்யூனிஸ்ட் இல்லை ஆனால் மார்க்ஸீய வாதி என்று விளக்கினார்.
நான் இதில் மணிகண்டனோடு உடன்படுகிறேன். விளக்கம் கடைசியில் தருகிறேன்.

கருத்து நான்கு
கவிதையினை ரசனை வாயிலாகவும் கோட்பாடு வாயிலாகவும் பகுத்து கூறினார். இதற்கும் சிலர் உடன்படவில்லை.
எனக்கும் இதில் மாறுபட்ட கருத்து உள்ளது. மணிகண்டன் அவர்களுக்கு இதனை விளக்க அச்சமயத்தில் போதுமான வார்த்தைகள் கிடைக்க வில்லை எனக் கருதுகின்றேன். இன்னும் ஆழமாக இதனைப் பார்க்க வேண்டும்.

இனி ஒவ்வொன்றாக பின்னோக்கிப் பார்ப்போம்.

கவிதையை ரசனை வாயிலாக பார்க்கும் போது வாசகன் கவிதையினை உணர்கின்றான். கவிதையை படைத்த பிறகு கவிதை கவிஞனுக்குச் சொந்தமில்லை. வாசகனுக்குச் சொந்தமாகிறது.
கவிதையை கோட்பாட்டின் வாயிலாக பார்க்கும்போது திறனாய்வாளனுக்குச் சொந்தமாகிறது.

இங்கு ரசனையைப் பெறுவது மட்டுமே வாசகனுக்கு போதும் என்றார் மணிகண்டன். அதனை  நான் ஏற்கிறேன்.
வாசகன் அந்த ரசனையை உணர்வதே போதும். அதனை விவரிக்க வேண்டியதில்லை. அது திறனாய்வாளனின் பணி.

பொருத்தமாக இன்று (ஞாயிறு) காலை சன் தொலைக் காட்சியில் சுகி சிவம் கவிஞர்களைப் பற்றிக் குறிப்பிட்டார். (அதைக் கூட முழுமையாக என்னால் பார்க்க முடியவில்லை. வகுப்பு எடுக்க ஓடிவிட்டேன். கடவுளே!)
அதில் மனிதன் பார்க்கிறான். கவிஞன் உற்றுப் பார்க்கிறான். விஞ்ஞானி ஆய்ந்து பார்க்கிறான். மெய்ஞ்ஞானி உணர்ந்து பார்க்கிறான் என்று அழகாக விளக்கினார்.

கவிஞனுக்கு உற்றுப் பார்த்தலே போதுமானது. கண்ணாடி கொண்டு பார்த்தால் கவிதையின் முழுமை வெளிப்படாது.
எனவே கவிஞன் எந்த இயக்கத்தையும் சாராது தனித்து இயங்க வேண்டும் என்று தனது விருப்பத்தினை திரு.மணிகண்டன் கூறியது பார்வையாளர்களியிடையே தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டது எனக் கருதுகின்றேன்.

எனவே கம்பன் ஒரு சமயத்தினரின் (வைணவம்) வேண்டுகோளுக்கு இணங்க மொழிபெயர்த்தது ஒரு பணியே (செய்யுள்) தவிர சுயமான கவிதை இல்லை என்றதை ஏற்ற பார்வையாளர்கள்  திருவள்ளுவருக்குப் பிறகு தோன்றிய அனைத்து இலக்கியங்களும் பாரதிக்கு முன் வரை பக்தி சார்ந்தும் அந்தந்த காலகட்டங்களில் தோன்றிய இயக்கங்களினைச் சார்ந்த படைப்புகளை 
ஒரு வ்ரையறை வகுத்துக் கொண்டு அதனுள் இயங்கிய படைப்பாளிகளை கவிஞர்களாக என்னாலும் ஏற்க முடியவில்லையென்றாலும் பார்வையாளர்கள் ஏற்கவில்லை.

திருவள்ளுவருக்குப் பிறகு இரண்டாயிரம் ஆண்டுகளில் பாரதியாரில்தான் கவிதை நிற்கிறது என்ற போது பொதியவெற்பன் “பக்தி இலக்கியம், சித்தர் பாடல்கள், கம்பராமாயணம்” எல்லாம் கவிதைகள் இல்லையா என்றார்.

கவிஞன் சுயமாக படைத்தால்தான் கவிதை கவிதையாக மிளிரும். அன்றி வெறும் செய்யுளாக திறனறித் தேர்வாக அமையும் எனக் கருதுகின்றேன்.

 நம் சங்க காலப் பாடல்கள் ஏறக்குறைய அனைத்தும் சில தனிப்பாடல்களைத் தவிர ஒரு கட்டாயத்தின் பேரிலோ ஒருவரின் வேண்டுகோளின் அடிப்படையிலோ, இயற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் இயற்றப்பட்டன. இவை எங்ஙனம் கவிதையாகும்?

இதனையே திரு. மணிகண்டனும் குறிப்பிட்டார்.

இவ்வாறே கவிஞர்களை பட்டியலிடுவதும் ஒருவர் கவியா அல்லது மகா கவியா என்கிற சர்ச்சையில் ஈடுபடுவதும் தேவையற்ற ஒன்று. கவிதைகளை உணர்ந்தவர்கள், புரிந்தவர்கள் செய்வது இல்லை.

 ஐயா, நீங்கள் ஒருவரை மகாகவி என்று ஒருவரை ஏத்துவதால் அவருக்கு ஒரு பாதிப்பும் இல்லை. ஒருவரை மகாகவி இல்லை என்று தாழ்த்துவதால் சொற்சிலம்பினால் அடித்த வலிதான் மிஞ்சும். ஒருவர் திரைப்படத்திற்காக எழுதுகிறாரா அல்லது அவரது கவிதையை திரைப்படத்தில் பயன்படுத்துகிறார்களா என்பதை வைத்தா ஒரு கவிஞரையோ கவிதையையோ மதிப்பிடுவது? அல்லது புறக்கணிப்பது?

ஒரு கவிதையை திறனாய்வாளரின் கண்ணோட்டத்தில் தொகுப்பாய்வாகவோ, பகுப்பாய்வாகவோ மட்டுமே பார்க்க வேண்டும். தனி மனித விருப்பு வெறுப்புகளை கவிதை வரிகளில் தேடுவது அபத்தமாக எனக்குப் படுகிறது.

இத்தகைய விவாதங்கள் ஜெமோவின் வார்த்தைகளில் சொல்வதானால் எனக்கும் அலுப்பூட்டுகிறது.

ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் கவிதைகளில் வரிகளாய் பார்ப்பதை விடுத்து அதன் தருணங்களைப் பாருங்கள். அத்தகைய தருணங்களில்தான் படைப்பாளியும் வாசகனும் ஒருங்கே இணைய முடியும் என நான் கருதுகின்றேன்.


இறுதியாக, அருவி அமைப்பின் முயற்சிகள் இன்றைய மாணவ சமுதாயத்திற்கு எடுத்துச் சொல்லி இத்தகைய அமைப்பின் அமர்வுகளுக்கு மாணவச் சமுதாயத்தை பங்கேற்க இப்பதிவை படிக்கும் அனைவரும் கண்டிப்பாக முயல வேண்டும் என்பதே இப்பதிவின் நோக்கம். எனவேதான் என் வழக்கமான பதிவுகள் சில பதிப்பிக்க காத்திருந்தும் இப்பதிவை அவசரமாக எழுதுகின்றேன்.






 

வியாழன், 11 ஆகஸ்ட், 2011

மொழிபெயர்ப்பா? பெயர்த்த மொழியா?

மொழிபெயர்ப்பின் வழித்தடங்களைக் கோவையில் நடக்கும் இலக்கிய கூட்டம் ஒன்றில் திரு.அசதா விவரிக்கிறார்.
விவரங்களுக்கு

புதன், 13 ஜூலை, 2011

உதகை காவிய முகாம் அனுபவங்கள் - 1

எனது உதகை காவிய முகாம் அனுபவங்களை நண்பர் கிரி அவர்கள் தமது இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

பதிவினை சிரமம் பாராமல் சிரத்தையுடன் செப்பனிட்ட பாஸ்கருக்கும் வெளியிட்ட கிரி அவர்களுக்கும் நன்றி.

அறிவிப்பு

ஜெயமோகன் அவர்களின் காவிய முகாம் உதகையில் நடந்தது. அதில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. அந்த அனுபவங்களை சுருக்கமாக இன்னொரு பதிவரின் வலைப் பூவில் வெளிவர இருக்கிறது. விரிவான கட்டுரைகள் எனது முடிக்கப் படாத சிறிய தொடர்கள் முடிந்த பின்னர் வெளிவரும்.

மணிமேகலை இயம்பும் கணிதமும், அந்த நாளும் வந்திடாதோ ஆகியன நீண்டத் தொடர்கள்.

மணிமேகலை கட்டுரையில் முதலில் முதல் 26 காதைகளுக்கு நாவலர் பண்டித. ந.மு.வெங்கடசாமி நாட்டாரவர்களும், இறுதி 4 காதைகளுக்கு பேராசிரியர் ஒளவை சு.துரைசாமிப் பிள்ளையவர்களும் உரை எழுதியுள்ளனர். எளிய தமிழில் பேராசிரியர். துரை.தண்டபாணி எழுதியுள்ளார். இவருடைய உரையை உமா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

அதனையே எடுத்து எழுதுகிறேன்.
வேறு யாருமே உரை எழுதவில்லை என்பது வியப்புக்கு உரியது.

சமயக் கணக்கர் தம் திறங்கேட்ட காதைக்கு இதுவரை எந்த கணித ஆசிரியரும் விளக்க முன் வரவில்லை என்பது வேதனைக்கு உரியது.

எனவேதான் இதிலுள்ள கணித நுட்பங்களை எளிய தமிழில் ஆய்ந்து எழுதவிருக்கிறேன்.

செவ்வாய், 12 ஜூலை, 2011

சித்தர் பாடல்களில் நான் அறிந்தது - 2

அல்லலை நீக்கி அறிவோடு இருப்போருக்குப்
பல்லாக்கு ஏதுக்கடி – குதம்பாய்
பல்லாக்கு ஏதுக்கடி ?

இது குதம்பை சித்தர் பாடியது.
தெளிவாக சொற்கள் விளங்கினாலும் இதன் உள்ளர்த்தங்கள் பல இருக்கின்றன.

திருக்குறளில், ‘அறத்தாறு இதுவென வேண்டா சிவிகையோடு பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை’ எனத் திருவள்ளுவர் குறிப்பிட்டதை இங்கு ஒப்பிட்டு பார்க்கலாம்.

அல்லல் எது?

அதை நீக்குவது எங்ஙனம்?

அதனை நீக்கி அறிவோடு இருப்பவருக்கு ஏன் பல்லாக்கு தேவையில்லை என்று வினாக்களை எழுப்பினால் நமக்கு சில கருத்துக்கள் தோன்றுகின்றன.

1. மேலார்ந்த பொருள் அல்லலை விரும்பாததால்தான் பல்லக்கில் செல்ல விரும்புகின்றனர்.

2. உள்ளார்ந்த பொருளாக இந்த உடல் அல்லல் படுகிறது. எனவே பல்லக்கில் செல்ல மனம் விரும்புகிறது. ஆனால் அறிவோடு இருப்பவர்களுக்கு மெய்ஞ்ஞானம் அடைய விரும்புவோர் உடல் அல்லல்படுவதை பொருட்படுத்துவதில்லை. எனவே அவர்களுக்கு பல்லக்கு தேவையில்லை.

3. திருவள்ளுவர் கூறும்போது அறத்தின் வழி இது எனக் கொள்ள வேண்டாம் என்கிறார். எது? சிவிகையோடு பொறுத்தான் சிவிகையில் இருப்பவன். அதாவது சிவிகையை இந்த உடலில் உள்ள உயிர் என்று கருதினால் சிவிகையை சுமப்பவனாக பூமி வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களை, அல்லல்களை சுமப்பவராக நம்மைக் கருதிக் கொண்டால் மெய்ஞ்ஞான அறிவுடன் இருப்பவன் பற்ற்ற்ற இறைவனைப் பற்றுவதற்காக பல்லக்கில் ஏறும் பற்றைக் கூட விடுபவன் எனப் பொருள் கொள்ளலாம் எனக் கருதுகிறேன்.

4. பல்லக்கு, சிவிகை, தூக்கு என மூன்று இருக்கிறது. இதில் தூக்கு ஒருவர் தூக்கிச் செல்வது. சிவிகை இருவர் தோளில் சுமப்பது. பல்லக்கு தலைக்கு மேலே நால்வரோ, அதற்கு மேற்பட்ட பலரோ சுமப்பது. இங்கு பல்லக்கை குறிப்பிடுவதின் காரணம் மனிதனுக்கு பல பொறுப்புகளும் கடமைகளும் உண்டு என்பதைனையே சுட்டி காட்டுகிறது.

5. அல்லலை நீக்கினால் இன்பம் ஏற்படுகிறது. அறிவுடன் இருப்போர்க்கு ஆன்ந்தம் ஏற்படுகிறது. பல்லக்கில் இருப்பவர்களுக்கும் இத்தகைய இன்பமே கிட்டுகிறது. ஆனால் பல்லக்கை சுமப்பவர்களுக்கு எப்படி இன்பம் ஏற்படும்? முதலாவதாக, தூக்கு, சிவிகை முதலியவற்றை சுமப்பவர்களுக்கு ஏற்படும் துன்பத்தை விட பல்லக்கை சுமப்பவர்களுக்கு குறைவுதான். பல்லக்கை சுமப்பவர்களுக்கு சுமக்கிறமே என்கிற பெருமித உண்ர்வே மேலிடும்.

புதன், 27 ஏப்ரல், 2011

அஞ்சலி!

கடந்த இரு மாதங்களாக தேர்வு நேரம் மற்றும் நுழைவுத் தேர்வு பயிற்சி என பணியில் இருந்ததாலும் சோம்பலாலும் எந்த பதிவும் எழுதவில்லை. ( நண்பர் பாஸ்கர் வற்புறுத்தியும் கூட). இன்று எழுத நேர்ந்ததற்கு காரணம் எங்கள் ஷீத்தல்.
நேற்று காலை 11 மணியளவில் எங்களை விட்டுப் பிரிந்து விட்டான் என்பதை என்னால்
இன்னும் நம்ப முடியவில்லை.
ஒவ்வொருவருக்கும் அவரவர் செல்லப் பிராணிகளைப் பற்றி அதிகம் சொல்ல துடிப்பார்கள்.
என்னால் சொல்ல முடிந்தது தற்போது இதுதான்.
எங்கள் வாயில்லாக் குழந்தை ஏழே வயதில் எங்களை விட்டுப் பிரிய மனம் இல்லாமல் பிரிந்து விட்டான். கடைசி நிமிடங்களில் எங்களை தொட்டுத் தொட்டு ஏதோ சொல்ல நினைத்தது என்ன? தெரியவில்லை.




சனி, 19 பிப்ரவரி, 2011

எழுதாப் பொருளைப் பேசத் துணிந்தேன்

இந்த வலைப்பூ தொடங்கியதன் நோக்கமே எளிய தமிழில் இலக்கியங்களை சாதாரண வாசகருக்கு அறிமுகப் படுத்துவதுதான்.
இதன் தொடர்ச்சியாகவே, திருக்குறளைப் பற்றி, கீதை, கவிதை, கட்டுரை என எழுதத் துவங்கினேன்.
இதன் அடுத்த கட்டமாக சிவஞான முனிவர் இயற்றிய சிவஞான மாபாடியத்தை படித்துக் கொண்டிருந்த போது சில கருத்துகளில் பாட பேதங்கள் இருப்பதாக அடியேன் அறிவுக்கு புலப்பட்டது.
அதைப் பற்றி எழுதுவதன் மூலம் ஆன்ற அறிவுடைய சான்றோர் படித்து மேலும் விளக்கம் தருவர் என நினைக்கின்றேன். இதை அதிக பிரசங்கித்தனம் (தக்க தமிழ் சொல் நினைவுக்கு வரவில்லை) என்று எண்ண வேண்டாம். விளக்கம் தருவோர் இதனைக் கருத்தில் கொண்டு என்னை பொறுத்தருள்க.

அதில்,
“இவ்வத்துவிதம், ஏனையோர் கூறும் அத்துவிதம் போலக் கேவலம் என்றாதல், விசிட்டம் என்றாதல், மறுதலை என்றாதல், யாதானும் ஒன்றான் விசேடிக்கப்பட்டு நின்று பொருள் உணர்த்தாது, சுத்தமாய் நின்றே பொருள் உணர்த்துதலிற் சுத்தாத்துவிதம் என வழங்கப்படும். ஈண்டுச் சுத்தம் என்றது யாதானும் ஒன்றான் விசேடிக்கப்படாது நிற்றலை. அது “விசிட்டசத்தை”, “சுத்தசத்தை” எனத் தார்க்கிகர் கூறும் வாய்பாட்டானும் அறிக. ஏனையோர் கூறும் அத்துவிதம் கேவலம் முதலியவற்றான் விசேடிக்கப்படாத வழி அவர் கூறும் பொருள் தருதற்கு ஏலாமையின், அவையெல்லாம் சுத்தாத்துவிதம் ஆகாமையும் காண்க.” என்று விளக்குகிறார்.
குறிப்பு மேற்கண்ட பத்தி சாதாரணமான வாசகருக்கு புரிதல் கடினம். எனவே சுருக்கமாக விளக்குகிறேன்.
த்வைதம் என்கிற தத்துவம் அத்வைதம் போல, விசிட்டாத்வைதம் போல மற்றொரு தத்துவம் என்று கூறுகிறார். கேவலம், சுத்தம் என்பதன் பொருளை பின்னர் விரிவாக விளக்குகிறேன். ஏன் எனில் இங்கு சுத்தம் என்பது எதனையும் விசேடிக்கப்படாமல் நிற்றல். ஆதலால் அத்வைதம், விசிட்டாத்வைதம் முதலியவை சுத்தாத்துவம் ஆகாது என்கிறார்.

இனி கீழ்க்கண்டவாறு விளக்கம் கொள்கிறேன்.
முனிவர் கேவலமான த்வைதம் என்றும் கூறும் நெறியைக் கற்பித்த சங்கரர் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டு அல்லது அதற்கு பிற்பட்ட காலத்தில் வாழ்ந்தார் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். மற்ற அத்வைதம் போல சுத்த த்வைதம் பெறவில்லை என்று முனிவர் கூறுதலால் சுத்தாத்வைதம் ஏனைய நெறிகளுக்கும் பிற்பட்டதாகக் கருதப்படும்.
ஆகையால் சுத்தாத்வைதம் மிக அண்மைக் காலத்தது என்று முடியும். இது உண்மையல்ல.

சுத்தாத்துவிதம் என்று சைவர்களும், விசிட்டாத்வைதம் என்று வைணவர்களும் கூறிக் கொள்கின்றனர். அது போல் கேவலாத்துவிதம் எனவோ, மறுதலை (மறுதலை என்பது இதற்கு மாறுபாடான ஒன்று எனலாம்) அத்வைதம் எனவோ மற்றவர்கள் கூறுவதில்லை. அந்தந்த தத்துவ நெறிகளைக் கூறியவர்களும் இச்சொற்களை பயன்படுத்தியிருக்க வேண்டும். இல்லையெனில் கேவலாத்துவிதம், மறுதலை அத்துவிதம் எனக்கூறுதல் படைத்து மொழிதல் என்னும் குற்றமாகும் என்பதே எனது துணிபு.

அதுமட்டுமல்ல, கேவலம் என்பதால் கூறிய முறை என வாதிடுவோர் அத்துவிதம் என்னும் சொல்லை கூறுதல் எங்ஙனம்? அது இன்மைப் பொருளைக் குறிக்கும் என்று ஏற்றுக் கொண்டாலும், ‘இரண்டும் இல்லை’ என்ற பொருளைத் தருமே அன்றி வாதிடுவோர் கூறும் அத்துணை விரித்த பொருளைத் தராது. எனவே கேவலம் என்னும் அடைமொழிக்கும் பயன் இல்லை.

அன்றியும் ‘சுத்தாத்துவிதம்’ என்பதில் இருக்கும் ‘சுத்தம்’ என்னும் சொல் தூய்மையானப் பொருள் என்கிற அடைமொழி அன்று. அவ்வாறெனில், பிரம்மம் ஒன்றே உண்மைப் பொருள் அதற்கு பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை என்பதனால் அத்துவிதம் என்பதன் பொருளும் இதுவே ஆதல் வேண்டும் என்கிற வாத நிலைக்கே அத்தகைய கூற்று பொருள் தரும்.

அடுத்த இடுகையில் மேலும் தொடர்கிறேன்.

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

ஞானக் கண் ஒன்று இருந்திடும் போதிலே....

நட்பாஸின் கட்டுரை தக்க சமயத்தில் வந்திருக்கிறது. முதலில் அதற்கு ஒரு பின்னூட்டம் போடலாம் என்றுதான் நினைத்தேன். அது நீண்டுவிடும் எனத் தோன்றியதால் இந்த பதிவு.
முதலில் இரு விஷயங்கள்.
ஒன்று அந்தப் பதிவை பாராட்டுவதற்காக இதை எழுதவில்லை. அதிலுள்ள சில கருத்துக்கள் எனது மனதில் வெகு காலம் இருந்து வந்து நட்பாஸ் எழுத்து வடிவம் கொடுப்பதற்காக காத்திருந்ததோ எனத் தோன்றுகிறது.
இரண்டு எனது பலவீனங்களை வெளிபடுத்தியோ யாரையும் புண்படுத்தும் நோக்கிலோ இந்த பதிவு எழுதவில்லை.
எதற்காக இந்த பீடிகை என்பது முழுவதும் படித்தால் விளங்கும்.

பதினைந்து வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி.
திருப்பூரில் பாரதியாரின் நினைவு நாளையொட்டி ரோடரி சங்கத்தினர் பள்ளிகளுக்கிடையேயான கவிதை, கட்டுரை, பேச்சு, பாடல் போட்டிகளை நடத்தினர். இதில் நடுவர்களில் ஒருவராக இருக்க எனக்கு அழைப்பு வந்தது. தமிழில் எனக்கு இருந்த ஆர்வத்தினால் உடனே ஒப்புக் கொண்டேன். பிறகுதான் தெரிந்தது. என்னை பேச்சு போட்டியிலும் இசை போட்டியிலும் நடுவராக போட்டிருந்தார்கள்.

இசை போட்டியில் என்னுடன் அமர்ந்த மற்ற இருவரும் முறையாக சங்கீதம் கற்றவர்கள். வித்வான் பெண்மணிகள். பங்கேற்ற திருப்பூர் மாணவ மாணவியர் அனைவருமே நன்றாக பாடினர். முதல் இடத்திற்கும் மூன்றாம் இடத்திற்கும் இரண்டு இரண்டு பேர்களைத் தேர்வு செய்தேன். எனவே பிறகு மற்ற நடுவர்களோடு கலந்து ஆலோசித்து ஒவ்வொரு இடத்திற்கும் ஒருவ்ரை மட்டும் தேர்ந்து எடுத்து மற்றவ்ரை பட்டியலிலிருந்து நீக்கினோம். இவ்வாறு நீக்கப்பட்டவர்கள் சரியாக பாடவில்லை என்று பொருள் இல்லை. தேர்ந்து எடுக்கப்பட்டவர்களை விட அதிகமாக தவறு செய்தனர் என்பதுதான் காரணம்.

அது மட்டுமல்ல மற்றவர்களுக்கு நான் போட்டிருந்த மதிப்பெண்களுக்கும் மற்ற இரு நடுவர்களின் மதிப்பெண்களுடன் அப்படியே ஒத்து போயிற்று. முக்கியமான விசயம் என்னவென்றால் முதல் இடத்திற்கும், மூன்றாம் இடத்திற்கும் நான் தேர்வு செய்தவர்கள் எந்த எந்த இடங்களில் பாடுவதில் தவறு செய்தார்கள் என்பதை மிகவும் சரியாக என்னால் குறிப்பிட முடிந்தது. அது என்ன வகையான தவறு என்பதை சங்கீத அறிவு உடைய அந்த இரு நடுவர்களும் விளக்கினார்கள்.

என் மனைவியும் என் மகனும் இன்று வ்ரை என்னை கிண்டல் செய்து வியந்த விசயம் என்னவென்றால் என்னை எப்படி நடுவராக போட்டார்கள் என்றுதான்.
காரணம் என்னால் சுமாராக கூட பாட வராது என்பதுதான். என் மனைவியும் மகனும் அருமையாக பாடக் கூடியவர்கள்.
ஆனால் அவர்களுக்கு ராகங்களின் பெயர்கள், சரளி வரிசை, தாள வகைகள் தெரியாது. நானோ ராகங்களின் பெயர்கள், தாள வகைகள் பற்றி படித்திருக்கிறேன்.

இன்றுவரை ஏன் ஒரு முறை நான் பணியாற்றிய கல்லூரியில் ஒன்றில் கூட மீண்டும் இத்தகைய வாய்ப்பு வந்து நடுவராக நான் பணியாற்றியது சரியா என்று எனக்கே நான் கேட்டுக் கொள்வேன். என்னால் தம் கட்டி ராகத்துடன், தாள சுதியோடு பாட முடியாத போது நடுவராக எனக்கு என்ன தகுதி, முறையா? என்று என்னை நானே பலமுறை கேட்டுக் கொள்வேன்.

என்னை இத்தனை காலம் உறுத்தி கொண்டிருந்த இந்த விசயம் இன்று நட்பாஸின் கட்டுரையை படித்தபோதுதான் மனம் நிம்மதி அடைந்தது. நட்பாஸூக்கு மீண்டும் நன்றி.

சனி, 12 பிப்ரவரி, 2011

பயணம் திரைப்பட விமரிசனம் - 1

பயணம் – 1
மீண்டும் பிரகாஷ்ராஜ், ராதா மோகன் இணைந்து தந்திருக்கும் குடும்பத்தினருடன் உட்கார்ந்து பார்க்கும் வகையில் பயணித்திருக்கும் படம்.
விமான கடத்தல், தீவிரவாதியை விடுவிக்க பேரம், பாகிஸ்தான், அப்பாவி முஸ்லீம்களைக் கூட தீவிரவாத கண்ணோட்டத்துடன் பார்க்க வைக்கும் ஜிகாத் என்கிற பெயரில் பாகிஸ்தானிலிருந்து மூளைச் சலவை செய்து நாட்டில் ஊடுருவும் சில தீவிரவாதிகளைப் பற்றிச் சொல்லும் படம்.

Stock home syndrome, hertz , இதுவ்ரை நடந்த விமான கடத்தல்களைப் பற்றி விவரஙகளை நண்பர் திரு.சரவண மூர்த்தியிடம் கேட்டிருக்கிறேன். அடுத்த பதிவில் விவரமாக வெளியிடுகிறேன்.

கணவனிடம் சில வருடங்கள் சண்டை போட்டு சலித்து தனியாக பிரயாணிக்கும் பெண், அருகில் கல்யாணம் ஆன புதிதில் மனைவியிடம் சண்டை போட்டுவிட்டு, நீண்ட காலமாக வறட்டு ஜம்பமாக மன்னிப்பு கேட்காமல் இருந்து பிறகு மன்னிப்பு கேட்கும் கணவன், பாகிஸ்தானிலிருந்து வந்து குழந்தையின் ஆபரஷேனை சென்னையில் முடித்து விட்டு பாகிஸ்தான் திரும்பும் பெற்றோர், சிகரெட் பிடிக்கும் நவீன காலத்து பெண், ஸ்டெதொஸ்கோப் கழுத்திலேயே தொங்கவிட்டு அலையாத டாக்டர். கார்ல்மார்க்ஸையும் காந்தியையும் படித்தவர், குரானையும் பைபிளையும் ஒன்றாக கருதும் பாதிரியார், மத்திய அமைச்சர் என்று அலட்டி கொள்ளாதவர், ஜோசியத்தை பிழைப்பாக கொண்டவர், சினிமாவில் ஹீரோத்தனத்தை காட்டி, நிஜத்தில் சாதாரணமானவராய் இருந்து தூங்கி வழிந்து, இறுதியில் பொங்கி எழும் சினிமா ஹீரோ, அவருடைய ரசிகனாய் இருந்து ஹீரோவின் நிஜ முகம் தெரிந்து ஹீரோவே மறந்து போன அவருடைய பஞ்ச் டயலாக்குகளை நினைவுபடுத்தும் ரசிகர் என ஒவ்வொருவரிடம் ஒரு கதையை வைத்துக் கொண்டு அவர்களுடைய கனவுகள் போல் மேலே பறக்கும் விமானம்.

ஐஏ எஸ் அதிகாரியின் கோபம், பயணிகளின் பயம், மீடியாக்களின் ஆர்வம் என அனைவரது உணர்ச்சிகளையும் படம் பிடிக்கும் ரெட் காமிரா.

தீவிரவாதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற/ எதிர்க்க திராணியற்று குழம்பி தவிக்கும் இந்திய அரசியல்வாதிகளின் பிடியில் செயலற்று நிற்கும் போலிஸ் துறை அதிகாரிகளைப் பற்றிச் சொல்லும் படம்.

ஹீரோவாக நாகார்ஜூனா தமிழ் கதா நாயகர்கள் போல் எந்த பஞ்ச் டயலாக் பேசாத ஹீரோவாக, தன்னுடைய பங்கு வரும்வரை காத்திருந்து செய்ய வேண்டிய வேலையை மட்டும் கச்சிதமாக முடிக்கும் ஒரு அதிகாரியாக, இப்படிபட்ட ஹீரோக்கள் தமிழ் சினிமாவிற்கு புதுசு.

பாடல்கள் தேவையில்லை என்பதை உணர்ந்து பட தலைப்பு போடும்போது மட்டும் தலைப்பை ஒட்டிய ஒரு பாடல்.

ரெட் காமிரா இறுதி காட்சி வரை தென்றல். இறுதி பத்து நிமிடங்களில் புயல் வேகம்.

படத்தின் வேகத்தை குறைக்காத திகட்டாத காமெடி காட்சிகள். ஒவ்வொரு ஷாட்டிலும் சாட்டையடி தரும் மனிரத்ன ஸ்டைலில் வசனங்கள்.
அனாவசியமாக ஒரு வசனம் கூட இல்லை. இறுதியில் குழந்தையிடம் தீவிரவாதி பரிசு பற்றி பேசும் ஒரு வசனம் உட்பட.

காஷ்மீர் காட்சிகளில் மட்டும் தென்படும் தமிழ் சப்டைடில்கள் மற்ற இடங்களில் ஒவ்வொருவருடைய பதவிகளைக் குறிக்கும்போது ஆங்கிலத்தில் மட்டுமே காட்டப்படுவது ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு சிரமமாயிருக்கும்.

விமானம் ஒரு இடத்தில் நான்கைந்து நாட்களுக்கு மேல் நிறுத்தப்படுகிறது. மும்பை நிகழ்ச்சி போல் மீடியாக்களில் நல்ல தீனியாக காண்பிக்கப் படுகிறது. டி ஆர் பி ரேட்டிங்கிற்காகவும் மக்களிடம் உண்மையைச் சொல்கிறோம் என்கிற போர்வையில் பத்திரிக்கை சுதந்திரம் பேசும் மீடியாக்களுக்கு சாட்டையடி.



பஞ்ச் டையலாக் மட்டுமே பேசிக் கொண்டு சினிமாவில் தீவிரவாதிகளை துரத்திக் கொண்டேயிருக்கும் சினிமா ஹீரோக்களுக்கு சாட்டையடி. இறுதியில் சினிமா ஹீரோ பொங்கி எழுவது இயல்பாக காட்டப்படுவது அழகு.


பாஸ்கர் மட்டும் ஒவ்வொரு முறையும் தீவிரவாதிகளிடம் ஒரு சின்ன வேண்டுகோள் விடுக்கிறார். நாமும் ஒரு சின்ன வேண்டுகோள் வைக்கிறோம். தரமான படம் தருவதற்காக மெனக்கெடும் நீங்கள் மொழி, அபியும் நானும் படங்களைப் போல் சற்று அழுத்த்மான கதைக் களத்தை அடுத்த முறை எடுங்கள்.
பயணம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம்.
ஒரு தடவை படித்த நடுத்தர வர்க்கத்தினர் குடும்பத்தோடு பார்த்து விட்டு வரலாம்.

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிகுலேஷன் மேல் நிலைப் பள்ளி ஆண்டுவிழா

முதல்வர் வாசித்த ஆண்டறிக்கை.

வாழ்க்கை பயணத்திலே
வழியை சிந்திக்கும் தருணத்திலே
வந்த வழி எது
செல்லும் வழி எது
தீர்மானிப்பது யாரு?
நம்மை அன்றி வேறு யாரு?
முடிவு எடுத்துக் கூறு.

ஏழு வருடங்கள் கழிந்து விட்டன. எட்டாம் ஆண்டு ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியின் எட்டாம் ஆண்டுவிழாவிற்காக அனைவரும் இங்கே கூடியிருக்கிறோம்.

இத்தருணத்தில் 2010 – 2011 ஆண்டறிக்கையை வாசிப்பதில் பெருமையடைகின்றேன்.

ஆய கலைகள் அனைத்தும் வாசி
மாய வித்தைகள் செய்ய யோசி
சரளமாக ஆங்கிலத்தில் பேசி
வரலாம் பெரிய மனிதனாக என் ஆசி
ஆங்கிலம் பொருள் ஈட்ட தேவை
பழக்கப்படுத்து பேசுவதற்கு நாவை
மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவதற்கு பயிற்சியளிக்க பெங்களூருவிலிருந்து ஐ.எல்.எம் என்கிற பயிற்சி நிறுவனத்தினர் மூன்று மாதங்கள் சிறப்பு பயிற்சி அளித்தனர். இதற்காக செலவுத் தொகையான ஒரு இலட்சத்தை நிர்வாகம் ஒரு இலட்சத்தை செலவு செய்தது. இதே பயிற்சி அளித்த மற்ற பள்ளிகளைப் போல் மாணவர்களிடம் எந்த கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. மூன்று மாதப் பயிற்சியின் பலனாக நம் மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசும் மனோதைரியம் ஏற்பட்டுள்ளது.

படிக்க படிக்க வளருவது அறிவுக் கண் பார்வை. படிக்க தேவை நல்ல கண் பார்வை அதுவே கற்பதற்கு முக்கிய தேவை என்பதால் லோட்டஸ் ஐ பவுண்டேஷன் நம் மாணவர்களுக்காகப் பள்ளி வளாகத்தில் கண் சிகிச்சை முகாம் நடத்தியது.

ஆசிரியர் பணி அறப்பணி என்றார் அறிஞர் அண்ணா. கற்க கற்க ஊறும் அறிவுக் கேணி என்பதை உணர்ந்த அறிவுப் பசி போக்கும் ஆசிரியரின் திறன் மேம்படுதல் மாணவர்களுக்கு நன்மை பயக்கும் என்பதால் எஜூ லேர்ன் நம் பள்ளி ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் க்ளாஸ் பயிற்சி அளித்தது. இப்பயிற்சியின் மூலம் வரும் ஆண்டு முதல் நம் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கணினி மூலம் கல்வி கற்பிப்பர்.
கண்ணோடு காண்பதெல்லாம் உண்மையில்லை. அறிவினைப் பயன்படுத்தி அறிவுக் கண்ணோடு காண வேண்டும் என்பதனை உணர்த்த நம் பள்ளி மாணவர்களுக்காக ஒரு மாஜிக் ஷோ பள்ளி வளாகத்திலேயே நடத்தப் பட்டது.
உடம்பார் அழியின் உயிரார் அழிவர். உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்பார் திருமூலர். யோகாசன பயிற்சி மாணவர்களுக்கு இன்றியமையாத ஒன்று. நம் பள்ளி மாணவர்களுக்கு கோவை மாவட்டத்திலேயே யோகாசன பயிற்சி சிறப்பாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு குறைந்த கட்டணத்தில் அளிக்கப்படுவது நம் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே.

திருப்பூரில் மாநில அளவில் நடைபெற்ற யோகாசன போட்டிகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மாணவர்கள் பங்கேற்றனர். இதில் நம் பள்ளி மாணவர்கள் பெருவாரியாக கலந்து கொண்டு பல பிரிவுகளில் வென்று சாதனை படைத்தனர்.
எம்.சத்யாவும் வி.சியாம்குமாரும் பி. நவீன்குமாரும் முதலிடம் பெற்றனர்.
ஈ.பிரீதி, எம். நிதீஷ், ரோஷினி ராஜ் இரண்டாம் இடத்தை பெற்றனர்.
ஏ.டி.கிருத்திகா, ஏ.டி. நிகிலா, கே. நந்தகுமார் மூன்றாம் இடத்தை பெற்றனர்.

கோவையில் சுப்பையா மீனாட்சி பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டிகளில் பல மாவட்டங்களிலிருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் முதலாம் வகுப்பு படிக்கும் யெஷ்வந்தும் ஏழாம் வகுப்பு படிக்கும் எம்.சத்யா நான்காம் இடத்தை பிடித்தனர்.

நம் பள்ளி மாணவர்களில் யோகாசனப் பயிற்சியில் முதலாவதாக விளங்குவது ஐந்தாம் வகுப்பு மாணவன் வி.ஷியாம் குமார். ஷியாம் குமாரின் சாதனைகளை முழுவதும் சொல்ல நேரமின்மை காரணமாக சிலவற்றை மட்டும் குறிப்பிட விரும்புகின்றேன்.
விஷ்ணு வித்யாலயாவில் நடந்த யோகாசன போட்டியில் பங்கேற்று சாம்பியன் கோப்பையை வென்ற சியாம்குமாருக்கு யோக நட்சத்திர விருது அளிக்கப்பட்டது.
சென்னையில் நடைபெற்ற தேசிய அளவில் இந்தியாவிலிருக்கும் அனைத்து மாநிலங்களிலிருந்து பெருவாரியாக போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் நம் சியாம்குமார் பொதுப் பிரிவில் முதலிடம் பெற்றான். கையால் தாங்கும் போட்டியிலும் முதலிடம் வென்றான். முன்னோக்கிய போட்டியில் இரண்டாம் இடத்தையும் பின்னோக்கிய போட்டியில் மூன்றாம் இடத்தையும் திருப்புதலில் மூன்றாம் இடத்தையும் பெற்றதால் நடைபெற்ற அனைத்துப் பிரிவு போட்டிகளிலும் பரிசு வென்றதன் மூலம் சாம்பியன்களின் சாம்பியன் என்கிற தகுதி பட்டம் கிடைத்தது.
வராஹி மிஸ்டிக் யோகா மையம் நடத்திய போட்டிகளில் முதலிடத்தை வென்றான். திருப்பூரில் நடைபெற்ற தமிழக மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளிலும் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்ட சியாம்குமாருக்கு இந்த சின்னஞ்சிறிய வயதில் ஒரு அரிய வாய்ப்பு கிட்டியது.

வாழ்க்கையில் ஒரு முறையேனும் வெளி நாட்டிற்கு சென்று பார்த்துவர நம்மில் பலரும் ஆசைப்படுவது உண்டு. வெனிஸ் நகர அழகில் மயங்கிய ஒரு அறிஞர் மனிதன் ஒரு தடவையாவது இறப்பதற்கு முன்னர் வெனிஸ் நகருக்குச் சென்று காண வேண்டும் என்பார். அக்கரைச் சீமை அழகில் மனம் ஆட கனவு காண்பார் பலர். அத்தகைய அயல் நாட்டிற்கு இந்தியா சார்பாக போட்டிகளில் கலந்து கொள்வது நம் அனைவரும் பெருமைப்படக் கூடிய ஒன்று.

அனைத்திற்கும் சிகரம் வைத்தது போல் மலேசியாவில் நடைபெற்ற யோகா போட்டிகளில் உலக அளவில் பல நாடுகளிலிருந்து கலந்து கொண்டனர். இதில் இந்தியா சார்பாக நம் பள்ளி மாணவன் சியாம்குமார் பங்கேற்க தேர்ந்தெடுக்கப் பட்டான்.
ஆர்டிஸ்டிக் ஜோடி யோகா போட்டியிலும், யோகா ஒலிம்பிக் போட்டியிலும் ஆக இரண்டு போட்டிகளில் உலக அளவில் முதலிடம் பெற்று இரண்டு தங்கம் பெற்றான். கோப்பையும் வென்று சாம்பியன் பட்டம் பெற்று தாய் நாட்டிற்கு திரும்பிய போது மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய மாண்புமிகு மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் வரவேற்று பாராட்டினார். கோவைக்கு வந்ததும் S P kannan சியாம்குமாரை பாராட்டினார்.
மலேசியா சென்று போட்டிகளில் கலந்து திரும்புவதற்கான செலவுத் தொகை எழுபத்தைந்தாயிரத்தில் ஐம்பதாயிரம் பள்ளி நிர்வாகம் தந்தது. திரு.சி.கிருஷ்ண குமார் அவர்கள் மனமுவந்து நேரில் வந்து பொருளுதவி கொடுத்து உதவினார். அவருக்கு எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மீதத் தொகையை நம் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களும், ஆசிரியர்களும் மனமுவந்து அளித்தனர். பொருளுதவியும் ஊக்கமும் கொடுத்து ஆதரித்த நல்ல உள்ளங்களுக்கு எங்கள் இதயப் பூர்வ நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உலக அளவில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த நம் பள்ளி மாணவன் சியாம்குமாரைப் பற்றிய செய்திகளை வெளியிட்ட தினத் தந்தி, மாலை மலர் பத்திரிக்கைகளுக்கு எங்களது நன்றி. இச்செய்தியை ஒலிபரப்பிய டி டிவி தொலைகாட்சி சானலுக்கும் காப்டன் டிவி தொலைக்காட்சி நிறுவனத்தாருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

யோகாசனம் மட்டுமல்ல. அனைத்து துறைகளிலும் நம் பள்ளி மாணவர்கள் முத்திரை பதித்துள்ளனர்.

சர்%ப் சோப்பு நிறுவனம் விஜய் டிவியுடன் இணைந்து நடத்திய கறை நல்லது என்கிற கதை சொல்லும் போட்டியில் நம் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு அசத்தினர்.

நம் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவன் சரவணன் இளம் அறிவியல் விஞ்ஞானியாக தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய அரசு ரூபாய் ஐந்தாயிரம் அளித்தது. கோவையில் சி.எஸ்.ஐ பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் நம் மாணவன் சரவணன் செய்த அறிவியல் சார்ந்து அமைக்கப்பட்ட இரயில் விபத்துகளைத் தடுக்கும் எளிய அமைப்பு அனைவரையும் கவர்ந்தது.

ஆகஸ்டு மாதத்தில் ஆனைகட்டியில் உள்ள சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மற்றும் சரணாலயத்திற்கு நம் பள்ளி மாணவர்கள் சென்று பறவைகளைக் கண்டு பல அறிவியல் உண்மைகளை அறிந்தனர். இயற்கையை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து நம் கோவையில் உள்ள பறவைகள் பற்றி பல செய்திகளை கற்றுக் கொண்டனர்.

அதேபோல இம்மாதம் நேரு ஏரோநாடிகல் பொறியியற் கல்லூரியில் நடைபெற்ற விமானக் கண்காட்சிக்கும் நேரில் சென்று விமானங்கள் இயங்கும் விதம், பறக்கும் முறை, விமானத்தில் உள்ள பாகங்கள் அவற்றின் செயல்பாடுகள் போன்றவற்றை கற்று பயனடைந்தனர்.

ஒவ்வொரு மாணவனிடமும் ஏதாவது ஒரு திறமை உண்டு என்பதை உணர்ந்து நெஸ்லே நிறுவனம் திறனறி தேர்வு நம் பள்ளி வளாகத்தில் நடத்தி மாணவர்களின் திறமைகளை வெளிக் கொணர்ந்தது.
இறுதியாக சில வார்த்தைகளைச் சொல்லி ஆண்டறிக்கையை நிறைவு செய்கிறேன்.
ஒவ்வொரு ஆண்டும்
கடந்து செல்லும் காற்றைப் போல.
தென்றலாய் வீசினாலும்
புயலாய் அடித்தாலும்
குளிராய் போர்த்தினாலும்
தீயாய் தகித்தாலும்
காற்றே உன்னை சுவாசிக்கிறேன்.
எனவேதான் வாழ்கிறேன்
என்றான் ஒரு கவிஞன்.
எனவே ஒவ்வொரு ஆண்டும் எங்களால் சிறப்பாக செயல்படுவது
உங்களால் மட்டுமே. உங்கள் ஆதரவால் மட்டுமே
என்று கூறி அமைகின்றேன்.
நன்றி.

வாழ்த்துவோம்


கோவை டி.வி.எஸ் நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் எட்டாவது ஆண்டு விழா 30-01-2010 ஞாயிற்றுக் கிழமை அன்று பள்ளி வளாகத்தில் விமரிசையாக நடைபெற்றது. சிறப்பம்சமாக பள்ளிக் குழந்தைகளின்  நான்கு பெற்றோர் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பு விருந்தினர்களாக முதல்வரும் தாளாளருமான திருமதி.பானுமதி வீரராகவன் அவர்களால் கவுரவிக்கப்பட்டனர். ஆண்டு விழா முழுவதையும் குழந்தைகளே தொகுத்து வழங்கியதும், முதலாம் வகுப்பில் படிக்கும் திரிசுலா, பி.ஹரிணி வரவேற்புரை வழங்கியது அனைவரையும் கவர்ந்தது.
      சிறந்த பெற்றோர்களான எல்.கே.ஜி வகுப்பில் படிக்கும் மா.மெர்ஸியின் பெற்றோர் திரு.மானுவல் ராஜா, திருமதி ஹேமா மானுவல் ராஜா அவர்கள், மூன்றாம் வகுப்பில் படிக்கும் ப.லட்சுமியின் பெற்றோர் திரு. பரதராஜன், திருமதி கீதா. அவர்கள், ஐந்தாம் வகுப்பில் படிக்கும் ஹ. நிவேதாவின் பெற்றோர் திரு.ஹரிஹரன், திருமதி தனலட்சுமி. அவர்கள் ஆறாம் வகுப்பில் படிக்கும் சல்மாசுல்தானாவின் பெற்றோர் திரு.ரஃபி, திருமதி.சமிதா அவர்கள்  படிப்பிலும், விளையாட்டிலும் மற்றும் பல்வேறுத் துறைகளில் சாதித்த பள்ளி மாணவ மாணவியருக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி பாராட்டினர்.

2011 ஜனவரி 15ல் மலேசியாவில் கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசிய யோகா போட்டிகளில் கோவையிலுள்ள ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் வி.ஷியாம்குமார் இந்திய அணி சார்பாக பங்கேற்று இரண்டு போட்டிகளில் முதலாவதாக வென்று இரண்டு தங்க பதக்கங்களைப் பெற்றுள்ளான்.  யோகா ஆசிரியர் திரு. பழனிச்சாமி அவர்களும் மலேசியாவில் நடைபெற்ற ஆசிய யோகா போட்டிகளில் யோக கலைமாமணி விருதையும் யோக கலாநிதி விருதும் கோப்பையும் பெற்றார். இருவரையும் பள்ளி நிர்வாகத்தினரும், பெற்றோர்களும், குழந்தைகளும் பாராட்டினர். ஆண்டறிக்கையை முதல்வர் வாசித்தார்.

பின்னர் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் முக்கிய அம்சமாக யோகாசனங்களான வீராசனம், சக்கராசனம், பத்ம மயூராசனம், ஏகபாக சிரசாசனம், பத்ம சிரசாசனம், இராஜ கபோட்டாசனம், உஷட்ராசனம், விருஷ்சாசனம், சர்வாங்காசனம் ஆகியவற்றை தொகுத்து அமைக்கப்பட்ட அபூர்வமான நடன நிகழ்ச்சி பார்வையாளர் அனைவரையும் கவர்ந்தது. இறுதியில் முதல்வர் பானுமதி வீரராகவன் நன்றியுரை வாசிக்க விழா இனிதே முடிந்தது.

ஆண்டறிக்கை தமிழில் அடுத்த இடுகையில்.


செவ்வாய், 25 ஜனவரி, 2011

குடி – அரசு – தினம் – வாழ்த்து.

வாய்யா ! என்ன ரொம்ப நாளா ஆளைக் காணோம்?

ஊருக்குப் போயிருந்தேன். சரி. குடியரசு தின வாழ்த்துக்களைப் பிடி.

கேட்க வேண்டும் என நினைத்திருந்தேன். குடியரசு என்றால் என்னப்பா? வெள்ளைக்காரன்கிட்டேயிருந்து விடுதலை வாங்கிட்டோம். குடியரசு யாருகிட்டேயிருந்து வாங்கினோம்? என்ன வித்தியாசம்?

இரு. இரு. அடுக்கிட்டே போகாதே. ஒவ்வொண்ணா கேளு. சொல்றேன்.
சுதந்திரத்திற்கு முன்னாடி மன்னராட்சி இருந்தது. இப்போ நடக்கிறது மக்களாட்சி. அதாவது மக்கள் சேர்ந்து ஒருவரை தேர்ந்தெடுக்கலாம். ஐந்து வருடங்களில் அந்த ஆள் ஒன்னுமே செய்யலைன்னா வேறு ஒருவரை தேர்ந்தெடுக்கலாம். இவரை வீட்டுக்கு அனுப்பிடலாம்.

நல்லா புரியுது. ஆனா அந்த இன்னொருவர் எங்கே இருப்பார்? என்னைக் கூட தேர்ந்தெடுப்பார்களா?

ஆசையை பாரு. நீ ஏதாவது தலைவருடைய மகனாக (மகள் கொஞ்சம் கஷ்டம்.) இருந்தால் தலைவருடைய இடத்திற்கு உன்னைத் தவிர வேறு யாருக்கும் உட்கார தில் இருக்காது. அதாவது தலைவருக்கு அரசியல் வாரிசு தலைவருடைய மகன்தான்.

இரு. இரு. இது ஏதோ மன்னராட்சி மாதிரி இருக்குதே. அப்போ சோழன் காலத்தில் இருந்துச்சே குடவோலை முறை மாதிரியா இந்த தேர்தல்?

இது வேறு. குடவோலை காலத்தில் சாதாரண மனிதன் கூட மன்னராக முடியும். இப்போ குறைஞ்சது ஒரு கண்டெயினர் நிறைய பணம் வச்சிருக்கிற தலைவர் மகன்தான் அரசியலில் பெரிய தலையாக முடியும்.

எனக்குப் புரியலை. இப்போ இருக்கிற மாதிரி அன்னைக்கி இந்தியா இல்லைதானே?

கரெக்ட். அப்போது 554 சமஸ்தானங்களாக இந்தியா பிரிந்திருந்தது. நம்ம சர்தார் வல்லபபாய் படேல் அதை ஒன்னாக சேர்த்து பாரதம். இந்தியன் யூனியன் அப்படின்னு பேரு வச்சாரு.

இப்போ புரியுது. ஏன் எந்த சமஸ்தானத்துக்காரன் கூட தண்ணீர் மற்றவங்களுக்கு தர மாட்டேங்கிறான். மறுபடியும் தனித்தனியாக போக ரெடி அப்படின்னு தைரியமா பேட்டி கொடுக்கிறான். இவனுங்களை பிரிவினைவாதிகள் அப்படின்னு தைரியமா கைது பண்ணி உள்ளே போடலாம். போடணும். சரி. இந்த பேருக்கு என்ன அர்த்தம்?

நீ எதுக்கு அடி போடுறேன்னு புரியுது. குடி என்று அரசு சொல்றதை வாழ்த்தறது தப்பு. குடி என்றால் மக்கள் என அர்த்தம்.

அப்படியா! அப்போ சரி. குடியரசு தின வாழ்த்துகள்.

ஜெய் ஹிந்த் !

ஞாயிறு, 23 ஜனவரி, 2011

குடிச்சது அவன். துடிச்சது நான்.

எனக்கு மின்னஞ்சலில் வந்த ஒரு ஆங்கிலக் கவிதை.

அம்மா,
நேற்று ஒரு விருந்துக்குச் சென்றேன்.
நன்றாக நினைவில் இருக்கிறது.
என்னைக் குடிக்காதே என்று
நீ சொன்னதம்மா.
நானும் குடித்தேன்
சோடா மட்டும்.

அம்மம்மா!
எவ்வளவு பெரிய சாதனை!
சாப்பாடு முன்னாடி இல்லாமல்
சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கலாம்.
சாப்பாட்டை முன்னாடி வைத்துக் கொண்டே
சாப்பிடாமல் இருப்பது
அம்மம்மா!

குடிக்காமல் வண்டி ஓட்டினேன் அம்மா!
எவ்வளவு பேர்
ஒருவரா / இருவரா?
அங்கிருந்த அனைவரும்
வற்புறுத்தியும்
ம்ஹூம் நான் குடிக்கவேயில்லை.

சரிதானே அம்மா நான் செஞ்சது?
எனக்கு தெரியும்
நீ சரியானதைத்தான் சொல்வாய் எப்போதும்.
விருந்து முடியும் நேரமம்மா
விடைபெற்று செல்ல
அனைவரும் தயார்.
ஒருவர் ஒருவராக
கிளம்பிட்டாங்க.

எனக்குத் தெரியும்,
காரில் நான் ஏறும்போதே
வீட்டிற்கு முழுசா
போய் சேர்ந்துடுவேன்னு.
ஏன் தெரியுமா?
உன்னோட வளர்ப்பு
சோடை போகுமா?

காரை கிளப்பினேன்.
ரோட்டுக்கும் வந்து விட்டேனம்மா!
அப்போதுதான்
அது நடந்தது.
அந்த இன்னொரு கார்
என் காரை
கவனிக்காமல்
ஆமாம்
கவனித்திருக்காது.
என் காரின் மேல்
வேகமாக மோத
......

அந்த ரோட்டின் ஓரத்தில்
அம்மா
அப்படியே அசையாமல்
கிடந்தேன்.
காதில் கேட்டது.
அந்த போலீஸ்காரன் பேசினது.
”கண்டிப்பா இவனில்லை.
அவந்தான் குடிச்சிருக்கான்.”
குடிச்சது அவன்
துடிச்சது நானம்மா.

செத்துகிட்டு இருக்கேம்மா!
எனக்குத் தெரியும்.
நீயும் இங்கே
வருவாய் சீக்கிரம்.
எனக்கு மட்டும் ஏம்மா?
செத்துப் போகணும் சும்மா?

என்னை சுத்தி
இரத்தம் அம்மா இரத்தம்.
என்னோட இரத்தம்தான்.
இல்லை இல்லை
உன்னோட இரத்தம்தான்.
டாக்டர் சொல்றது
காதில் விழுது.
”அதிக நேரம் தாங்காது”

ஒன்னே ஒன்னு
உங்கிட்டே சொல்லனும்மா
சத்தியமா
நான் குடிக்கவே இல்லை.
குடிச்சது அவன்.
துடிச்சது நான்.

அவன் கூட
இந்த விருந்துக்குத்தான்
வந்திருப்பான்.
என்ன
ஒரே ஒரு
வித்தியாசம்.
குடிச்சது அவன்.
மடியப் போறது நான்.

சொல்லம்மா
ஏம்மா அவங்க குடிக்கணும்?
குடி குடியை கெடுக்கும்.
தெரியும்.
தெரிஞ்சும் ஏன்?
வலிக்குதம்மா
ரொம்ப
வலி
மார்பிலே
கத்தியாலே
குத்தின மாதிரி.

என் காரை இடிச்சவன்
அவன்தாம்மா
அங்கே
நடந்து போறான் பாரும்மா!
செத்துகிட்டு இருக்கேன் நான்.
வேறு என்ன அவனால் செய்ய முடியும்?
என்னைப் பார்த்துகிட்டே இருக்கிறதை விட?
சரியா இது
சொல்லம்மா?
(சமர்ப்பணம்: கோவையில் 31-12-2010 அன்று புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள பைக்கில் போன போது பின்னாடி வந்த பைக் வேகமாக மோதியதால் இறந்து போன என் பழைய மாணவன் பிரேம்குமாருக்கு இந்த கவிதை சமர்ப்பணம்.)

செவ்வாய், 18 ஜனவரி, 2011

பாராட்டுகிறோம்

2011 ஜனவரி 15ல் மலேசியாவில் கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசிய யோகா போட்டிகளில் கோவையிலுள்ள ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக்.மேனிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் வி.ஷியாம்குமார் (ஆண்களுக்கான 8 - 11 வயதுப் பிரிவில்)இந்திய அணி சார்பாக பங்கேற்று இரண்டு போட்டிகளில் முதலாவதாக வென்று இரண்டு தங்க பதக்கங்களைப் பெற்றுள்ளான் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

சனி, 1 ஜனவரி, 2011

என்ன கொண்டு வந்தாய் புத்தாண்டே?

மீண்டும் ஒரு புத்தாண்டு
தலைவர்களின் வாழ்த்துக்கள்
பழைய உறுதிமொழிகளே
உறுதியற்று கிட்டாது என
தொலைந்து போனதாக முடிவான நிலையில்
மீண்டும் தூசி தட்டி இன்று.

திரும்பி பார்க்கவே அஞ்சும்போது
விரும்பி பார்க்க எங்கிருக்கிறது எதிர்காலம்?
அரும்பிய ஆசைகள்
துரும்பு கிடைக்காதா என துவண்ட மனம்
பொறுப்புகளின் சுமையில் சலித்த தோள்கள்.

பெரிசுகளின் அந்த கால பெருமைகள்.
சிறிசுகளின் விடுமுறை குதூகலங்கள்.
புத்தாண்டானால் என்ன?
இரவில் தூங்க மறுப்பவர்களை தூங்கச் சொல்லி
பின் தூங்காமல் தூங்கி
அதிகாலையில் எழுந்த கோலமே
வாசலில் புத்தாண்டு வாழ்த்துகளாய்
விரியும் வீட்டு பெண்களின் ......
மீண்டும் ஒரு புத்தாண்டு.

என்ன சொல்லி என்ன?
இரண்டு நாள் விடுமுறையோடு
வந்த புத்தாண்டே
என்ன கொண்டு வந்திருக்கிறாய்?

எத்தனை ஊழல் செய்யும்
எத்தனை அரசிய்ல்வாதியாக
எத்தனை காலம்தான் பொறுப்பது?
அத்தனை வேலைகளும்
செய்யும் எந்திரன் செய்வது எப்போது?
எந்திரனும் காதலிக்கும்போது
செய்துவிடுமோ ஊழல்?
பயமாய் இருக்கிறது.