செவ்வாய், 25 ஜனவரி, 2011

குடி – அரசு – தினம் – வாழ்த்து.

வாய்யா ! என்ன ரொம்ப நாளா ஆளைக் காணோம்?

ஊருக்குப் போயிருந்தேன். சரி. குடியரசு தின வாழ்த்துக்களைப் பிடி.

கேட்க வேண்டும் என நினைத்திருந்தேன். குடியரசு என்றால் என்னப்பா? வெள்ளைக்காரன்கிட்டேயிருந்து விடுதலை வாங்கிட்டோம். குடியரசு யாருகிட்டேயிருந்து வாங்கினோம்? என்ன வித்தியாசம்?

இரு. இரு. அடுக்கிட்டே போகாதே. ஒவ்வொண்ணா கேளு. சொல்றேன்.
சுதந்திரத்திற்கு முன்னாடி மன்னராட்சி இருந்தது. இப்போ நடக்கிறது மக்களாட்சி. அதாவது மக்கள் சேர்ந்து ஒருவரை தேர்ந்தெடுக்கலாம். ஐந்து வருடங்களில் அந்த ஆள் ஒன்னுமே செய்யலைன்னா வேறு ஒருவரை தேர்ந்தெடுக்கலாம். இவரை வீட்டுக்கு அனுப்பிடலாம்.

நல்லா புரியுது. ஆனா அந்த இன்னொருவர் எங்கே இருப்பார்? என்னைக் கூட தேர்ந்தெடுப்பார்களா?

ஆசையை பாரு. நீ ஏதாவது தலைவருடைய மகனாக (மகள் கொஞ்சம் கஷ்டம்.) இருந்தால் தலைவருடைய இடத்திற்கு உன்னைத் தவிர வேறு யாருக்கும் உட்கார தில் இருக்காது. அதாவது தலைவருக்கு அரசியல் வாரிசு தலைவருடைய மகன்தான்.

இரு. இரு. இது ஏதோ மன்னராட்சி மாதிரி இருக்குதே. அப்போ சோழன் காலத்தில் இருந்துச்சே குடவோலை முறை மாதிரியா இந்த தேர்தல்?

இது வேறு. குடவோலை காலத்தில் சாதாரண மனிதன் கூட மன்னராக முடியும். இப்போ குறைஞ்சது ஒரு கண்டெயினர் நிறைய பணம் வச்சிருக்கிற தலைவர் மகன்தான் அரசியலில் பெரிய தலையாக முடியும்.

எனக்குப் புரியலை. இப்போ இருக்கிற மாதிரி அன்னைக்கி இந்தியா இல்லைதானே?

கரெக்ட். அப்போது 554 சமஸ்தானங்களாக இந்தியா பிரிந்திருந்தது. நம்ம சர்தார் வல்லபபாய் படேல் அதை ஒன்னாக சேர்த்து பாரதம். இந்தியன் யூனியன் அப்படின்னு பேரு வச்சாரு.

இப்போ புரியுது. ஏன் எந்த சமஸ்தானத்துக்காரன் கூட தண்ணீர் மற்றவங்களுக்கு தர மாட்டேங்கிறான். மறுபடியும் தனித்தனியாக போக ரெடி அப்படின்னு தைரியமா பேட்டி கொடுக்கிறான். இவனுங்களை பிரிவினைவாதிகள் அப்படின்னு தைரியமா கைது பண்ணி உள்ளே போடலாம். போடணும். சரி. இந்த பேருக்கு என்ன அர்த்தம்?

நீ எதுக்கு அடி போடுறேன்னு புரியுது. குடி என்று அரசு சொல்றதை வாழ்த்தறது தப்பு. குடி என்றால் மக்கள் என அர்த்தம்.

அப்படியா! அப்போ சரி. குடியரசு தின வாழ்த்துகள்.

ஜெய் ஹிந்த் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக