செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

வாழ்த்துவோம்


கோவை டி.வி.எஸ் நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் எட்டாவது ஆண்டு விழா 30-01-2010 ஞாயிற்றுக் கிழமை அன்று பள்ளி வளாகத்தில் விமரிசையாக நடைபெற்றது. சிறப்பம்சமாக பள்ளிக் குழந்தைகளின்  நான்கு பெற்றோர் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பு விருந்தினர்களாக முதல்வரும் தாளாளருமான திருமதி.பானுமதி வீரராகவன் அவர்களால் கவுரவிக்கப்பட்டனர். ஆண்டு விழா முழுவதையும் குழந்தைகளே தொகுத்து வழங்கியதும், முதலாம் வகுப்பில் படிக்கும் திரிசுலா, பி.ஹரிணி வரவேற்புரை வழங்கியது அனைவரையும் கவர்ந்தது.
      சிறந்த பெற்றோர்களான எல்.கே.ஜி வகுப்பில் படிக்கும் மா.மெர்ஸியின் பெற்றோர் திரு.மானுவல் ராஜா, திருமதி ஹேமா மானுவல் ராஜா அவர்கள், மூன்றாம் வகுப்பில் படிக்கும் ப.லட்சுமியின் பெற்றோர் திரு. பரதராஜன், திருமதி கீதா. அவர்கள், ஐந்தாம் வகுப்பில் படிக்கும் ஹ. நிவேதாவின் பெற்றோர் திரு.ஹரிஹரன், திருமதி தனலட்சுமி. அவர்கள் ஆறாம் வகுப்பில் படிக்கும் சல்மாசுல்தானாவின் பெற்றோர் திரு.ரஃபி, திருமதி.சமிதா அவர்கள்  படிப்பிலும், விளையாட்டிலும் மற்றும் பல்வேறுத் துறைகளில் சாதித்த பள்ளி மாணவ மாணவியருக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி பாராட்டினர்.

2011 ஜனவரி 15ல் மலேசியாவில் கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசிய யோகா போட்டிகளில் கோவையிலுள்ள ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் வி.ஷியாம்குமார் இந்திய அணி சார்பாக பங்கேற்று இரண்டு போட்டிகளில் முதலாவதாக வென்று இரண்டு தங்க பதக்கங்களைப் பெற்றுள்ளான்.  யோகா ஆசிரியர் திரு. பழனிச்சாமி அவர்களும் மலேசியாவில் நடைபெற்ற ஆசிய யோகா போட்டிகளில் யோக கலைமாமணி விருதையும் யோக கலாநிதி விருதும் கோப்பையும் பெற்றார். இருவரையும் பள்ளி நிர்வாகத்தினரும், பெற்றோர்களும், குழந்தைகளும் பாராட்டினர். ஆண்டறிக்கையை முதல்வர் வாசித்தார்.

பின்னர் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் முக்கிய அம்சமாக யோகாசனங்களான வீராசனம், சக்கராசனம், பத்ம மயூராசனம், ஏகபாக சிரசாசனம், பத்ம சிரசாசனம், இராஜ கபோட்டாசனம், உஷட்ராசனம், விருஷ்சாசனம், சர்வாங்காசனம் ஆகியவற்றை தொகுத்து அமைக்கப்பட்ட அபூர்வமான நடன நிகழ்ச்சி பார்வையாளர் அனைவரையும் கவர்ந்தது. இறுதியில் முதல்வர் பானுமதி வீரராகவன் நன்றியுரை வாசிக்க விழா இனிதே முடிந்தது.

ஆண்டறிக்கை தமிழில் அடுத்த இடுகையில்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக