திங்கள், 31 ஆகஸ்ட், 2009

குறள் ௨௧ - ௨௫

௨௧ . ஏடுகளும் சொல்லும் துணிந்து
நாடும் ஒழுக்கத்தை அணிந்து
விருப்பங்களைத் துறந்து
இருக்கும் சான்றோரே சிறந்து
விளங்குகிறார் அனைத்திலும் என்று.
௨௨. விருப்பங்களைத் துறந்தவர்
பெருமையை அளந்து பார்ப்பதும் இன்றே
எவ்வளவு பேர் இறந்தவர்
எண்ணிப் பார்ப்பதும் ஒன்றே
௨௩. அறம் இது, அறம் அல்லது இது என்று தெரிந்து
அறம் செய்பவர் யாரென்று காட்டும் உலகு புரிந்து.
௨௪. கண் போன போக்கில் கால் செல்லவிடாமல் தடுத்து
தன் விருப்பம் போல உடல் இயங்கும் நிலை விடுத்து
வாயில் சொல்ல வரும் வார்த்தைகளில் அளவு எடுத்து
நோயில்லாமல் கேட்கும் காதுக்கும், மூக்குக்கும் தொடுத்து
மனதில் உறுதி உடையவர் விதையாவார் நல்ல நிலத்தை எடுத்து.
௨௫. கண் செய்த பிழையினால் உடலில் ஆயிரம் கொண்டவன்
தன் விருப்பப்படி உடலினை மாற்றி அகலிகையைக் கண்டவன்,
வாயில் விருப்பப்படி ஊர்வசியை அருச்சுனனுக்கு கொடுத்து,
நோயில் விழுந்தது போல நடித்து கர்ணனின் காது குண்டலம் எடுத்து,
தனது நாசியினாலும் தனக்கே கேடு வரவழைத்துக் கொண்ட இந்திரனே
மனது அடக்கத் தெரியாதவருக்கு நல்ல எடுத்துக் காட்டு.