ஞாயிறு, 20 டிசம்பர், 2009

மன்னிக்க வேண்டுகிறேன்...

சில நாட்களாகவே மனதில் ஏற்பட்ட குழப்பத்தால், புதிய இடுகை போடாமல் தவிர்த்து வந்தேன்.
திருக்குறளை புதுக் கவிதை வடிவில் எழுத விரும்பியதற்கு காரணம் அனைவருக்கும் திருக்குறளின் வாழ்க்கை நெறி கருத்துக்கள் சென்றடைய வேண்டும் என்பதே. ஆனால் நான் நேசிக்கும் எழுத்தாளர் திரு.சுஜாதா அவர்களின் புற நானூறு - ஒரு எளிய அறிமுகம் என்ற நூலின் எதிர்வினை கருத்துக்களை படித்தவுடன் எனக்குள் அச்சம் ஏற்பட்டது உண்மை.
தமிழில் எனக்குள்ள புலமை மிகக் குறைவு. முக்கியமாக இலக்கண அறிவு மிக குறைவு என்பதால் திருக்குறளை புதுக் கவிதையாக எழுதும் முயற்சி தற்காலிகமாக கைவிடுகிறேன்.
நைடதம் புலவர்களுக்கு ஒளடதம் என்பார்கள். எனவே நைடத செய்யுள்களையும் அதன் கருத்துக்களையும் பதிப்பிக்க எண்ணியுள்ளேன்
இதன் மூலம் நானும் யாப்பிலக்கணத்தை முறையாக பயிலும் வாய்ப்பு உண்டு.
அடுத்த இடுகையிலிருந்து நைடதம் பயிலுவோம்.