வியாழன், 17 ஜூன், 2010

வள்ளுவர் குறிப்பிட்டது நர்ஸைய்யா, கம்பவுண்டரையா?

உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்(று)
அப்பானால் கூற்றே மருந்து.

என்ற குறள் கூறும் கருத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கீழ்க்கண்ட சுட்டிகளில் கூறப்பட்டுள்ளது.
http://vaarththai.wordpress.com/2010/06/14/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D/

http://vaarththai.wordpress.com/2010/06/17/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D/

பரிமேலழகரின் முழுமையான உரை கீழே அனைவரும் புரியும் வண்ணம் எளிமையான
தமிழில் தரப்பட்டுள்ளது.
மருந்து – நோய்க்கு மருந்தாவது
உற்றவன் – அதனை உற்றவன் (அதாவது நோயுற்றவன்)
தீர்ப்பான் – அதனைத் தீர்க்கும் மருத்துவர்
மருந்து - அவனுக்கு கருவியாகிய மருந்து
உழைச் செல்வான் என்ற அப்பால் நாற்கூற்று – அதனை நேரம், அளவு தவறாமல் நோயாளிக்கு தருபவன் என்று சொல்லப்பட்ட நான்கு பகுதியையுடைய நான்கு திறத்தது.

நான்கு என்ற எண் வருகிறதால், அப்பால் என்று கூறினார். நான்கு கூறு என்பதன் விளக்கம்.

உற்றவன் வகை நான்கு – 1) பொருளுடைமை 2) மருத்துவன் கூறியபடி நடத்தல் 3)நோயின் நிலை உணரும் சக்தி 4)மருந்தினால் ஏற்படும் விளைவுகளையும், துன்பத்தையும் பொறுத்தல்.

தீர்ப்பான் வகை நான்கு – 1) நோய்கண்டு அஞ்சாமை 2) கல்வியும் நுண்ணறிவும் இருத்தல். 3) மிகுந்த அனுபவம் 4) மன சுத்தம், உடல் சுத்தம், வாக்கு சுத்தம் கொண்டவராய் இருத்தல்.

மருந்தின் வகை நான்கு – 1) பல விதமான நோய்களுக்கும் ஏற்றதாக இருத்தல் 2)சுவை, வீரியம், விளைவு முதலியவற்றில் மேம்பட்டு இருத்தல் 3)எளிதாக நோயாளிக்கு தரும்படி இருத்தல் 4) குறிப்பிட்ட நோய்க்கு பொருத்தமானதாய் இருத்தல்.

இயற்றுவான் வகை நான்கு – 1) அன்புடையவராயிருத்தல் 2) மனம், வாக்கு, உடல் சுத்தமாயிருத்தல் 3) மருத்துவர் கூறியவாறு மருந்தை அளித்து, நோயாளியை பராமரித்தல் 4) மருத்துவ அறிவுடையவராய் இருத்தல்.

இவையெல்லாம் ஒன்று இணைந்தால் ஒழிய நோய் தீராது என்பதால் இத்தொகுதியையும் மருந்து என்றார்.

பரிமேலழகர் மருந்தினைப் பிழையாமல் இயற்றுவான் என்று கூறுகிறார். இதற்கு பல பொருள் இருந்தாலும் இங்கு கூட இருந்து உதவுபவரைக் குறிக்கிறது என்பதற்கு ஆதாரம் பழைய உரைகளில் இருக்கிறது.
அதாவது பரிகாரம் பண்ணுபவன் என்பார் பரிப்பெருமாள். நோயாளிக்கு கூட இருந்து உதவுபவன் என்பது காளிங்கரின் உரை. பரிமேலழகருக்கு அடுத்ததாக சிறந்து விளங்குவது காளிங்கரின் உரை என்பதால் அவரது உரையே சரி என ஏற்கிறேன். இங்கு நர்சைத் தான் குறிப்பிடுகிறார். மருந்தை தயாரிப்பவர் அல்ல.

சனி, 12 ஜூன், 2010

நானும் இயற்றுவேன் செந்தமிழ் பாட்டு

ஒரு அமெரிக்க கவிதை தழுவல்

I, Too, Sing America by Langston Hughes
I, too, sing America.

I am the darker brother.
They send me to eat in the kitchen
When company comes,
But I laugh,
And eat well,
And grow strong.

Tomorrow,
I'll be at the table
When company comes.
Nobody'll dare
Say to me,
"Eat in the kitchen,"
Then.

Besides,
They'll see how beautiful I am
And be ashamed--

I, too, am America.


நானும் இயற்றுவேன்
செந்தமிழ் பாட்டு

பச்சைத் தமிழனய்யா நான் !
எள்ளி நகையாடி என்னை
தூக்கி எறிகிறவர்களே
சிரிக்கிறேன் உம்மை பார்த்து.
விரிக்கிறேன் என் கடையை

நாளை வரும்
எவரும் இசையமைக்க வருவார்
சுட்டி காட்ட முடியாது
எந்த நக்கீரனாலும்
கூட

பின்னர்
பாருங்கய்யா
என் செந்தமிழ் அழகை
நானும் இயற்றுவேன்
செந்தமிழ் பாட்டை
பச்சைத் தமிழனய்யா நான் !

பின்குறிப்பு: சத்தியமாக யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. உங்கள் எண்ணங்களுக்கு நீங்கள்தான் உரிமையாளர்.

மேலும் ஒரு மொழி பெயர்ப்பு

ஒரு ருஷிய கவிஞரின் கவிதை வரிகளை இணையத்தில் படிக்க நேர்ந்தது.
தமிழில் தழுவி எழுத முயற்சித்தேன்.
சொற்குற்றம், பொருட்குற்றம் இருப்பின் மன்னிக்கவும்.
ஆங்கில மொழிபெயர்ப்பும் எனது தமிழ் தழுவலும்

I Don't Know If You're Alive Or Dead by Anna Akhmatova
I don't know if you're alive or dead.
Can you on earth be sought,
Or only when the sunsets fade
Be mourned serenely in my thought?

All is for you: the daily prayer,
The sleepless heat at night,
And of my verses, the white
Flock, and of my eyes, the blue fire.

No-one was more cherished, no-one tortured
Me more, not
Even the one who betrayed me to torture,
Not even the one who caressed me and forgot.


இருக்கிறாயா? இல்லையா?
தெரியாது எனக்கு
எங்கே இருப்பாய்?
உலகில் எங்கேயோ,
அல்லது என் எண்ணத்தில் மட்டுமா?
தெரியாது எனக்கு.

அனைத்தும் உனக்கே.
என் தினசரி பிரார்த்தனையும்,
தூக்கமற்றதால் உஷ்ணமான இரவுகளும்
வானத்தில் பறக்கும் புறாக் கூட்டமாய்
வெள்ளை காகிதத்தில் எழுதிச் செல்லும்
என் கவிதை வரிகளும்,
நெருப்பில் உள்ள நீலமாய் என் விழிகளும்
அனைத்தும் உனக்கே

வேறு யாரும் இல்லை
என்னை
விரும்பி கொல்லவோ,
கொல்ல விரும்பியோ
வேறு யாரும் இல்லை
உன்னை விட
என்னை
நம்பிக்கை துரோகம் செய்து வதைத்தவர் கூட
உன்னை விட
என்னை ஆவலுடன் தழுவ வந்து
தழுவி பின் மறந்து செல்லும் தென்றலைப் போல்
வேறு யாரும் இல்லை
உன்னை விட
- கோ.சு.வீரராகவன்