11. வானிலிருந்து இறங்கி வருது இந்த பூமி
தேனின் சுவையாய் மழைதான் நமக்கு சாமி
12. உண்பதற்கும் நீர், உணவை சமைப்பதற்கும் நீர்
உண்ட உணவை செரிப்பதற்கும் நீர்.
13. அருமை மழையை சுமந்து
கருமை அடையும் மேகங்கள்
வருகை தர மறுத்தால்
வருகை தரும் பசியே.
14. மாரி இல்லை என்றால்
ஏரி இல்லை ஏருக்கும் தேவையில்லை
இலக்கியத்தை எளிய தமிழில் அனைவரும் புரிந்து பயன் பெறும் வண்ணம் தருவதே இவ்வலைப்பூவின் நோக்கம்.
செவ்வாய், 24 பிப்ரவரி, 2009
வியாழன், 12 பிப்ரவரி, 2009
குறள் 9,10
9. குணங்கள் எட்டு உடையவனை
வணங்காத தலை உடையவனுக்கு
இணங்காது அவனது ஐம்புலனும்.
10. கடலி்லும் நீந்தி கரையேறலாம்.
உடல் எடுத்த பிறவி பயனடைய
கடவுள் அடி சேர்
வணங்காத தலை உடையவனுக்கு
இணங்காது அவனது ஐம்புலனும்.
10. கடலி்லும் நீந்தி கரையேறலாம்.
உடல் எடுத்த பிறவி பயனடைய
கடவுள் அடி சேர்
குறள் 4 முதல் 8 வரை

வேண்டாம் துன்பம் என்போர்
வேண்டும அன்பும்
வேண்டாம் துயரமும் எனும் இறைவன் அருள்
வேண்டும் என்றே கருதுவார்
5) மீண்டும் பிறக்கும் வழி தருதலால் நல்லதும்
தூண்டும் மறுபடியும் என்பதால் நல்லது அல்லதும்
வேண்டும் வரம் தரும் இறைவனை
வேண்டுவோர் செய்ய மாட்டார்
6) கண்களால் தீயது நோக்கி புண்ணாக்காது
காதுகளால் தீயது கேட்டு பாதகம் செய்யாது
மூக்கினால் தீயது முகராமல்
வாக்கினால் தீயது பகராமல்
ஆக்கிய உடலினால் தீயது செய்யாமல் இருப்பர் இறைவனை
கண்ணால் கண்டு, காதால் புகழ் கேட்டு
வண்ண மலரால் அழகு செய்து வாயார வாழ்த்தி உடலால்
பண்ணிய புண்ணியம் உடையோர்
7) இறைவன் போல யாருண்டு
உறையும் மனதில் கவலையை
இறைவனை போல் தீர்ப்போர் யாருண்டு
8) கரை சேர நீந்தினாலும் இயலாது
இறைவன் தாள் சேர முயலாது
உறையும் உள்ளமுடையோர்
புதன், 11 பிப்ரவரி, 2009
புதுக் கவிதையில் திருக்குறள்
இந்த பகுதியில் எளிய தமிழில் இலக்கியத்தை அறிமுகப் படுத்த எண்ணியுள்ளேன். முதல் முயற்சியாக திருக்குறளைப் புதுக் கவிதை வடிவில் தர உள்ளேன். வாசிப்பவர்களும் பங்கு பெறலாம். மூலக் கருத்து சிதையாத வண்ண்ம் பாமரரும் புரியும் வண்ணம் எழுத வேண்டும் என்பதே நோக்கம்.
திருக்குறள்
அதிகாரம் 1 குறள் 1
அ எழுத்தில்
தொடங்குது தமிழ் எழுத்து
அனைத்திற்கும் தொடக்கமான இறைவனை வழுத்து.(வாழ்த்து)
குறள் 2
பயனில்லை
படிப்பதினால்
இறைவனை வணங்காவிடில்
குறள் 3
வாழலாம்
வையகத்தில்
வணக்கத்திற்குரியவனை வணங்கினால்.
திருக்குறள்
அதிகாரம் 1 குறள் 1
அ எழுத்தில்
தொடங்குது தமிழ் எழுத்து
அனைத்திற்கும் தொடக்கமான இறைவனை வழுத்து.(வாழ்த்து)
குறள் 2
பயனில்லை
படிப்பதினால்
இறைவனை வணங்காவிடில்
குறள் 3
வாழலாம்
வையகத்தில்
வணக்கத்திற்குரியவனை வணங்கினால்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)