வெள்ளி, 5 மார்ச், 2010

அத்தியாயம் 1 மனிதனும் வாய்ப்பும்

தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று - குறள்.

எந்த ஒரு மனிதனும் உலகில் பிறக்கும்போதே தனக்கான ஒரு வேலை இல்லாமல் பிறப்பதில்லை என்று லோவெல் கூறுகிறார்.

தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய் வருத்த கூலி தரும்.
யாரேனும் ஒருவர் இயக்காமல் உலகில் எந்த பொருளும் தானாக இயங்குவதில்லை என்று காஸ்ஃபீல்டு உரைக்கிறார்.


இதற்கு முன்னும் சரி, பின்னும் சரி, இனி ஒரு நாள் இதைப்போல் இருக்க முடியாது என்பது போல் ஒரு சிறந்த நற்செயல் செய்வதற்கு வாய்ப்பு வழங்காத நாள் எதுவும் இல்லை என்கிறார் பர்லே.

இந்த வாக்கியம் சற்று குழப்பமானது. விரிவாக பார்ப்போம்.

ஒன்றே செய்,
ஒன்றும் நன்றே செய்
நன்றும் இன்றே செய்
இன்றும் இன்னே செய் என்று கபிலர் கூறுவார்.

நல்லதை செய்வதற்கான வாய்ப்பு அமையாத நாளே இல்லை என்று பர்லே கூறுகிறார்.
நாம் என்ன நினைக்கிறோம்? அப்படிபட்ட நாளே மிகவும் அரியது என்று நினைக்கிறோம்.
இதனைத் தான் வள்ளுவரும்
எய்தற்கு அரியது இயைந்தக் கால் அந்நிலையே
செய்தற்கு அரிய செயல்
என்கிறார் என நினைக்கிறோம்.
இது தவறு. நல்லதை செய்வதற்கான வாய்ப்பு அரியது என்று நினைக்கிறோம். அதற்காக குறளை மேற்கோள் காட்டுகிறோம்.
ஆனால் குறள் கூறுவது என்ன?
செய்தற்கு அரிய செயலையும் செய்வதற்கான மனத் திட்பம் அரிது. அத்தகைய மனத்திட்பம் உடைய நிலையே செய்தற்கு அரிய செயலையும் செய்யும் நிலை என்று பொருள் கொள்ள வேண்டும்.
இப்போது பர்லே என்ன சொல்ல வருகிறார்?
அத்தகைய செயலை செய்ய முடியாத நாள் என்று கிடையாது. இந்த தருணம் கழிந்தால் பிறகு மீள்வதில்லை. எனவே வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். இது போல் இன்னும் சிறப்பாக அமையும் என்ற எதிர்பார்த்து வாய்ப்பை நழுவ விடுவதோ, இதற்கு முன்னர் அமைந்த வாய்ப்பு அளவிற்கு இப்போது அமையவில்லை என்று பழங்கதை பேசி வாய்ப்பை தட்டி கழிப்பதும் சரியில்லை என்கிறார்.
சரிதானே?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக