வெள்ளி, 5 மார்ச், 2010

முண்ணனியில் இரு

முண்ணனியில் இரு - ஆரிசன் ஸ்வெட் மார்டன் எழுதிய நூல் எனக்கு மிகவும் பிடித்த நூல். எனக்குள் பல பாதிப்புகளை ஏற்படுத்திய அந்த நூலை தமிழில் சி.ஆர்.ரவீந்திரன் வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்து கண்ணதாசன் பதிப்பகத்தார் வெளியிட்டிருக்கிறார்கள்.
அதனை மேலும் விரிவாக ஆராய்ந்து விரித்து எழுத நினைத்துள்ளேன். அதன் தழுவல் என்பதால் திரு.காந்தி கண்ணதாசன் அவர்கள் பதிப்புரிமை சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்பதால் அன்னாருக்கு இதன் மூலம் ஒரு வேண்டுகோள்.
இந்த பதிவுகள் லாப நோக்கமின்றி அனைவருக்கும் கருத்துக்கள் சென்றடைய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் குறிப்பிடப் பட்டுள்ள நூலின் ஆங்கில மூலத்திலிருந்து மட்டுமே எடுத்து  (முன்னுரை - முதல் இடுகை தவிர்த்து) மொழிபெயர்த்து மேலும் சில இசைந்த கருத்துக்களுடன் இணையத்தில் மட்டுமே வெளியிடுகிறேன். எனவே இதிலிருந்து யாரேனும் பயன்படுத்த விரும்பினால் கண்ணதாசன் பதிப்பகத்தாரை அணுகி முறையாக அனுமதி பெறவும். நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக